உன்னால்! உன்னால்! உன்னால் தான்!!



 உன்னால் சிரித்தவர் ஆயிரம்பேர் இருக்கலாம்;

 ஆனால், அழுதவர் ஒருவரும் இருக்கக் கூடாது.


உன்னால் வாழ்ந்தவர் அநேகர் இருக்கலாம்; 

 ஆனால், வீழ்ந்தவர் யாரும் இருக்கக்கூடாது.


 உன்னால் பசியாறியவர் பலபேர் இருக்கலாம்; 

 ஆனால், பட்டினியாய் ஒருவரும் இருக்கக் கூடாது.


 உன்னால் கர்த்தரின் மகிமையை பெற்றவர் பலர் இருக்கலாம்; 

 ஆனால், இழந்தவர்கள் ஒருவரும் இருக்கக் கூடாது.


ஆகவே,


இரட்சிக்கப்பட்ட கர்த்தரின் பிள்ளைகளாகிய நாம் பிறருக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டுமே தவிர, பிராப்ளமாய்(Problem) இருக்கக் கூடாது.


நம் வாழ்வின் இறுதி அடையாளங்கள் இவையே!


கர்த்தர் என் வெளிச்சமும்.... சங்கீதம் 27:1