❓❓ இரட்டைப் புதிர்கள்❓❓



❓ யூதாஸ் "மனம் வருந்தினான்" எதனால்? மனச்சாட்சி வாதித்ததால்.

❓பேதுரு "மனம் திருந்தினான்" எதனால்? கிருபையால்.


❓"மகா புத்திமான்". அவன் யார்? தாவீது.

❓'மகா புத்திசாலி" அவள் யார்? அபிகாயில்.


❓பழைய எற்பாட்டில் “குடிக்க தண்ணீர்" கேட்டது யார்? எலியேசர்.

❓புதிய ஏற்பாட்டில் "குடிக்க தண்ணீர்" கேட்டது யார்? இயேசு.


❓தண்ணீர் “இரத்தமாக" மாறியதெங்கே? நதியிலே.

❓தண்ணீர் "இரத்தமாக" தோன்றியதெங்கே? ஏதோம் வனாந்தரத்திலே.


❓பிறக்கவில்லை ஆனால் மரித்தான்- ஆதாம்.

❓பிறந்தான் ஆனால் மரிக்கவில்லை- எலியா.


❓சீட்டுப்போட்டு ராஜாவானான் யார்? சவுல்.

❓சீட்டுப்போட்டு அப்போஸ்தலன் ஆனான் யார்? மத்தியா.


❓புத்தகத்தை வாசித்த பின் அதை நதியிலே எறிந்து போட்டவன்- செராயா(எரேமியா 51:63)

❓புத்தகத்தை வாசித்தபின் அதை நெருப்பிலே எறிந்து போட்டவன்- யோயாக்கிம் ராஜா(எரேமியா 36:23)