ஆண்டு விழா நாள் இன்று!



இந்த நாளில் நாம் அனைவருமே "தேவனுக்கு நன்றி கணக்கு" செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.


🙏🏻 சுவாசம்: தேவன் அருளிய எண்ணற்ற நன்மைகளில் மிகச்சிறந்த, ஒப்பற்ற ஒன்று 'நம் ஜீவன்'. கர்த்தர் நம்மை கண்ணின் விழிப் போல் பாதுகாத்தது மட்டும் அல்ல, நல்ல திருச்சபையில் ஆவிக்குரிய தாய், தகப்பனின் அன்பு, சபை விசுவாசிகளின் ஐக்கியம் (சீயோன் குடும்பம்) இவைகளை எண்ணி தேவனை மகிமைப்படுத்துவோம்!


🙏🏻 விசுவாசம்: வாழ்க்கையை பிரமிக்கத்தக்க அனுபவமாய் மாற்றும் ஊக்கம் மிக்க முயற்சி. எபிரெயர் 11-ல் உள்ளபடி ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் இவர்களின் விசுவாசத்தை அறிவோம். நாமும் கூட விசுவாசத்துடன் மனரம்மியமாய் வாழ்ந்து, நன்றி கூறி தேவனை மகிமைப்படுத்துவோம்!


🙏🏻 விசேஷம்: எல்லா நிலைகளிலும் தேவன் நம்மோடிருந்ததே விசேஷம் தானே! மேலும், நம் சபை முன்மாதிரியான சபையாய், எதையும் விசேஷித்து செய்யும் கிருபை பெற்ற சபையாய், அனைவரையும் உற்சாகப்படுத்தி, உருவாக்கும் சபையாய் இருப்பதும் விசேஷம் தானே! ஏசாயா 50:7 ன்படி நன்றிக் கூறி தேவனை மகிமைப்படுத்துவோம்!


ஆகவே,


அனைவரும் ஐக்கியமாயிருப்போம், அனைவரும் அன்பாயிருப்போம், அனைவரும் சபைக்கு உண்மையாயிருப்போம், நன்றிக் கணக்கில் கடன் இல்லாது, செலுத்தித் தீர்ப்போம் !!🙏🏻🙏🏻