வாலிபனே!



🌊 பாயும் ஆறுகள் தன் போக்கை தானே தீர்மானிக்கின்றன.

🐦 வானில் வட்டமிடும் வண்ணப்பறவைகள் தன் தடத்தை தானே தீர்மானிக்கின்றன.


அன்பு வாலிபனே! அப்படியல்ல நீ!


👱🏻கர்த்தரின் கரத்தில் அடங்கி இருக்க வேண்டியவன் நீ;


👱🏻அவரின் சித்தம் அறிந்து செயல்பட வேண்டியவன் நீ;


👱🏻வசனத்தின்படி வாழ வேண்டியவன் நீ;


👱🏻உன் வாழ்க்கை பாதையை தீர்மானிப்பவன் அல்ல நீ;


👱🏻தேவன் தீர்மானித்த பாதையில் பயணிக்க வேண்டியவன் நீ;


👱🏻இயேசுவை அற்புத அடையாளங்களோடு நிருபிப்பவன் நீ;


👱🏻வறட்சியான காலத்தை வசந்தமாய் மாற்ற வேண்டியவன் நீ;


👱🏻சாத்தானின் சதிகளை சாதனைகளாக மாற்றுபவன் நீ;


👱🏻பரமனுக்காக உன் வாழ்வை பணயம் வைக்க பிறந்தவன் நீ;


👱🏻வாலிபத்தை கர்த்தருக்கு காணிக்கையாய் கொடுப்பவன் நீ;


👱🏻வாலிபனே!

இதை எல்லாம் கண்டு கலங்கிடாதே; திகைத்திடாதே; கர்த்தர் கரம் உனக்கு உண்டு மறந்திடாதே!


இள வயதும் வாலிபமும் மாயை என்பது நீ அறிந்தது தானே! பிரசங்கி 11:10