வாய்ப்பு


வீட்டுக்கு வாசலை போலத்தான், வாழ்க்கைக்கு வாய்ப்புகள்.


வாய்ப்புகளை எக்காரணம் கொண்டும் நழுவ விடக்கூடாது.


ஒரு பிரச்சினை என்பது நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு கிடைத்த வாய்ப்பு.


தோல்வி என்பது மேலும் புதியனவற்றை தொடங்குவதற்கான வாய்ப்பு.


வாய்ப்புகள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் வரும்.


வாய்ப்பு வாழ்க்கையின் அற்புதமான வெகுமதி.


அச்சம் இருப்பின் கடந்து செல்லும் வாய்ப்பை கைப்பற்ற துணிச்சல் இருக்காது.


தொடர்ந்து முயன்றால் தான் புதிய திட்டம், புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும்.


வாய்ப்பு மனிதர்களை இணைக்கிறது.


ஆகவே, தேவ பிள்ளைகளே! கர்த்தருடைய காரியங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தினால் சாதாரண மனிதனாலும் சரித்திரம் படைக்க முடியும் என்பதை அறிவோம்.