வாழ்க்கை


எறும்பு, பட்டாம்பூச்சியைப் போல வாழ ஆசைப்பட்டதில்லை.

நாய், சிங்கத்தை பார்த்து ஒரு நாளும் பொறாமைப்பட்டதில்லை.

யானை, பறக்கும் பறவையைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டதில்லை.


ஆனால் மனிதனே! நீ மட்டும் ஏன்

பிறரின் வாழ்க்கையைப் பார்க்கிறாய்? பொறாமைப்படுகிறாய்? பெருமூச்சுவிடுகிறாய்?


வாழ்க்கை விசேஷமானதுதான்:

ஆனாலும் நீ பிறரின் தூக்கத்தை தூங்க முடியாது. பிறரின் பசிக்கு சாப்பிட முடியாது. பிறரின் வாழ்க்கையை வாழ முடியாது.


நீ, தனி தான்; உன் தேவை தனி தான்; உன் பிரச்சனை தனி தான்; உன் தீர்வும் தனி தான். உன் வாழ்க்கையும் கூட தனி தான். ஆயினும் உன் வாழ்க்கை அதிசயமானதுதான்; அர்த்தமுள்ளதும்தான்.


ஆகவே இன்றிலிருந்து, உன் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து பார். வாழ்வின் ரசனை தெரியும்; அர்த்தமும் புரியும்.


இந்த வாழ்க்கை கர்த்தர் உனக்குக் கொடுத்த நன்கொடை;

அதனால், அவருக்கு ஏற்றார்போல், அவர் எதிர்பார்க்கிறமாதிரி வாழ்ந்தால், சந்தோஷமும், சமாதானமும் நம் மனதில் குடிக்கொள்ளும்.

எபி 12:1 ன்படி பாரமான யாவற்றையும்...... ஓடக்கடவோம்.