🤵🏻‍♀ பெண்களே!🤵🏻‍♀



🤵🏻‍♀ தெபோராள் தேசத்துக்காய் எழும்பினாள் அன்று; தெபோராக்களாய் நாம் எழும்புவோம் இன்று.


🤵🏻‍♀ இறை வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாய் மாறும்.

மண நாளில் கணவன் மேல் உண்டான அன்பு மரணம் பிரிக்கும் வரை மாறாதிருப்போம்.


🤵🏻‍♀ உழைப்பில் தேனீக்களாய் ரெபேக்காளைப் போல, அழைப்பில் உறுதியாய் ரூத்தைப் போல, இரக்கம், தயவு, அன்பு, தாழ்மை என்ற இளநூலினால் ஆன பல வண்ண ஆடை  அணிந்து ஆவிக்குரிய புதுமைப் பெண்களாய் இறைவனின் இதயத்திற்கு ஏற்ப வாழ்வோம்.


🤵🏻‍♀ பிள்ளைகளால் "பாக்கியவதி" என பட்டம் பெற்று, கணவரால் எல்லாருக்கும் மேற்பட்டவள் என புகழப்பெற்று, ஒளி வீசும் முத்துக்களாய் ஜொலிப்போம்.


🤵🏻‍♀ அடுப்பினடியில் கிடந்தாலும் அலங்கரிக்கப்பட்ட புறாச் சிறகுகளல்லவா நாம்!


😇 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும்...... 1 பேதுரு 3:4