சிந்தனைக்கு


1. இருக்கும் போது மட்டுமல்ல; இழக்கும் போதும் ஸ்தோத்திரம் சொல்பவனே தேவன் தேடும் மனிதன்.


2. வேதனைப்படுத்தியவர்களை வேரோடு மறந்துவிடு; ஆனால், அன்பு செலுத்தியவர்களை ஆயுள்வரை மறக்காதே!


3. உலகம் நமக்கு கற்றுத்தந்தது நன்மைசெய். இயேசு கற்றுத் தந்தது எதிரிக்கும் நன்மைசெய்.


4. ஓடி ஓடி உதவி செய்யும் வரைதான்

அனைவராலும் மதிக்கப்படுவாய்.

ஒருமுறை மறுத்துப்பார்; அடுத்தநொடியே அடியோடு மறக்கப்படுவாய் .


5.இலையுதிர் காலத்தில் தன் அத்தனை இலைகளையும் இழந்து ஒருமரம் சுமந்து நிற்பது

நம்பிக்கையை மட்டுமே.


6. வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல; அவை தான் உன்னை செதுக்குபவை.


7. முன்னேற்றத்திற்கான வழி முழங்கால்களில் உண்டு.


8. ஆயத்தப்பட்டிருக்கும் ஜனங்களுக்காக

ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் இடமே பரலோகம்.


9. எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால், ஏமாற்றம் பெரிதாகத் தெரியாது.


10. கொடுப்பது சிறிது என்று தயங்காதே;

பெறுபவருக்கு அது பெரிது.