சிந்தனைக்கு




♦️எழுந்தவுடன் ஜெபிக்கிறவர்களைவிட, ஜெபிக்கிறதற்காக, எழும்புகிறவர்களாய் இருப்போம்.


♦️ உழைப்பு, வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது.


♦️ தண்டனை கொடுக்க தாமதம் செய்; ஆனால், மன்னிப்பு கொடுக்க யோசனைகூடச் செய்யாதே.


♦️உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.

உன் நிலமை, கொஞ்சம் இறங்கினால்,

உன் நிழலும்கூட உன்னை மிதிக்கும்.


♦️ சுவிசேஷம் என்பது சுத்தியலால், கல்லை உடைப்பது அல்ல;

உளியால் சிலையை உருவாக்குவது.


♦️ சிலுவையை, தூரத்தில் இருந்து பார்க்கிறவன் நம்பிக்கையைப் பெறுவான்;அருகில் வந்து பார்க்கிறவன், இரட்சிப்பைப் பெறுவான்; தன் மீது சுமக்கிறவன், சீஷனாய் மாறுவான்.


♦️கிடைக்கப்பெற்ற கிருபையை, இடைக்கால மனிதர்களுக்காக விடைகொடுத்து விடாதே.


♦️ ஒரு கலசத்திற்கும் "பலன் உண்டு" என்பதை மறந்து விடாதே!