🌴 ஆச்சரியப்படுத்தும் ஆமணக்குச் செடி - யோனா 4:6🌴
🌴 ஆச்சரியப்படுத்தும் ஆமணக்குச் செடி - யோனா 4:6🌴
🌴மனமடிவாயிருந்த யோனாவை மட்டற்ற மகிழ்ச்சி அடையச் செய்தது ஆமணக்குச் செடி.
🌴 பல வருடங்கள் அல்ல - ஒரே இரவில் ஓங்கி வளர்ந்து நிழல் தந்தது ஆமணக்குச் செடி.
🌴 அறிகுறியே இல்லாத அதுவரை வெளியே தெரியாத அதிசயமாய் உண்டானது ஆமணக்குச் செடி.
🌴 விதைக்கவோ, தண்ணீர் ஊற்றவோ,எந்தப் பிரயாசமுமின்றி உண்டானது ஆமணக்குச் செடி.
🌴 மரத்தின் நிழல் அல்ல - குளுமையான நிழல் தந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆமணக்குச் செடி.
இதற்கெல்லாம் காரணம்...
😇 அற்பமானவைகளை வைத்து அதிசயமான காரியங்களை நிகழ்த்துவது நம் கர்த்தர் தானே!
😇 எளியவைகளை வைத்து எள்ளளவும் எதிர்பார்க்காதவைகளை சாதித்து காட்டுவதும் நம் கர்த்தர் தானே!
😇 எல்லாவற்றையும் ஆச்சரியப்படுத்துபவர் நம் கர்த்தர் ஒருவரே!